ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு - நடிகர் ரஞ்சித்


ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு - நடிகர் ரஞ்சித்
x

நமது கலாச்சாரமான வள்ளி கும்மியாட்டம், கோலாட்டம், குச்சி ஆட்டம் அது போன்ற கலைகள் நம் மண்ணில் மண்ணோடு மண்ணாக போய்விட்டது என்று நடிகர் ரஞ்சித் கூறினார்.

கோவை,

கோவை சவுரிபாளையத்தில் வள்ளி கும்மி ஆட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை ஆடி அசத்தினர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

நான் பிறந்த மண்ணில் நிற்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. நமது கலாச்சாரமான வள்ளி கும்மியாட்டம், கோலாட்டம், குச்சி ஆட்டம் போன்ற கலைகள் நம் மண்ணில் பரவிருந்த நிலையில் தற்போது மண்ணோடு மண்ணாக போய்விட்டது.

நான் ஒரு திரைப்பட கலைஞராக சொல்கிறேன், இன்றய காலகட்டத்தில் சினிமா பட நடிகர்கள் துணிக்கடை திறப்பு விழாவிற்கு கூட 5 லட்சம் முதல் 7 லட்சம் பணம் வாங்கி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அந்த காலத்தில் வயலில் குழந்தையைத் தொட்டிலில் போடும்போது, வேலை செய்யும் போது கும்மி பாடி மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் அனைவரும் மொபைல் போனை பயன்படுத்தி அதைத்தான் காதலிக்கிறோம், தவிர மனிதர்களை யாரும் காதலிக்கவில்லை. இந்த வள்ளி கும்மியாட்டத்தில் மருமகள், மாமியார், பேரன், பேத்தி ஆகியோர் ஒன்றிணைந்து ஆடும் ஒரு ஆட்டம் ஆகும்.

ஆனால்,'ஹேப்பி ஸ்ட்ரீட்','ஹேப்பி சண்டே' என்கிற பெயரில் பெண்கள் அரைகுறை ஆடையுடன் நடுரோட்டில் ஆடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. எனக்கு அரசு அதிகாரி என்ற ஒரு அதிகாரம் இருந்தால் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குவேன். இது போன்ற கலாச்சாரம் அடுத்த பேரழிவு நோக்கி எடுத்துச் செல்லும், என்றார்.

மேலும் பேசிய அவர், முதலில் மொபைல் போன் பேசுவதற்காகவே பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று குழந்தைகள் ஆபாச படம் பார்ப்பதற்காக மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள். ஹேப்பி சண்டே, ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகள் மூலம் தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் கலாச்சாரத்தை நாம் வளர விடக்கூடாது, வளர விடமாட்டோம் என நம்புகிறேன் என்று கூறினார்.



Next Story