"சாப்பாடு கொடுக்கல...! பாத்ரூம் போக விடல"…! நவாசுதீன் சித்திக் மனைவி பரபரப்பு புகார்….!


சாப்பாடு கொடுக்கல...! பாத்ரூம் போக விடல…!  நவாசுதீன் சித்திக் மனைவி பரபரப்பு புகார்….!
x

போலீசார் ஜைனப் சித்திக் மீது வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல், காயப்படுத்துதல், தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மும்பை,

முன்னணி பாலிவு நடிகர்களில் ஒருவர் நவாசுதீன் சித்திக்.இவரது மனைவி ஜைனப் என்ற ஆலியா சித்திக் இவர்களுக்கு 2 குழந்திகள் உள்ளனர். இந்த் நிலையில் கடந்த 2021 இல், நவாசுதீன் மனைவிக்கு வாட்ஸ்அப்பில் விவாகரத்து வழங்கினார்.

இந்த் நிலையில் சமீபத்தில் சொத்து தகராறில், நவாசுதீன் சித்திக்கின் தாயார் மெகருனிசா சித்திக் மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தில் தனது மருமகளான ஜைனப் மீது புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர், "ஜைனப் எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், என்னை கடுமையாக தாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் ஜைனப் சித்திக் மீது வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல், காயப்படுத்துதல், தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. நடிகர், அவரது மனைவி மற்றும் அவரது தாய்க்கு இடையேயான சொத்து தகராறில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் ஆலியாவின் வழக்கறிஞர் ரிஸ்வான் ஆலியாவை வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நவாசுதீன் மேற்கொண்டார் மேலும் அவர் உணவு, படுக்கை மற்றும் குளியலறைக்கு செல்லவிடாமல் தடுத்தார் என கூறி உள்ளார்.

ஆலியாவின் வழக்கறிஞர் ரிஸ்வான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் நவாசுதீன் சித்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆலியாவை வீட்டிலிருந்து அகற்ற தேவையான எல்லாவற்றையும் செய்தனர். அவர்கள் அவர் மீது அத்துமீறல் குற்றப் புகாரை பதிவு செய்தனர். பின்னர், போலீஸ் மூலம். , அவர்கள் அவரை கைது செய்வதாக மிரட்டினர்.

அவரை சுற்றி ஆண் பாதுகாவலர்களை நியமித்துள்ளனர். அவர் தனது தனது மைனர் குழந்தைகளுடன் வசிக்கும் மண்டபத்தில் சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளனர்.

போலீஸ் துறையின் செயல்கள் மற்றும் தோல்விகளை நான் நேரடியாகக் கூற விரும்பவில்லை, ஆனால் போலீஸ் அதிகாரிகளின் முன் அவர் அவமதிக்கப்பட்டாலும், அவரின் உரிமைகளைப் பாதுகாக்க எந்த போலீஸ் அதிகாரியும் வரவில்லை என்பதுதான் உண்மை.

கடந்த 7 தினங்களாக சாப்பாடு கொடுக்காமல், பாத்ரூம் போக விடாமல், குளிக்கவிடாமல் கொடுமைப்படுத்தி உள்ளனர். இருந்தாலும் அவர் மீது நவாசுதீன் சித்திக்கும், அவரது தாயாரும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு குற்றவழக்குகளை கொடுத்திருக்கின்றனர் என கூறி உள்ளார்


Next Story