'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியீடு


பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியீடு
x

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது.

சென்னை,

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை இயக்குனர் மணிரத்னம் 2 பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாக்கி இருந்தார். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 28-ம் தேதி 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்திருந்த இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், லால் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் வெளியான 10 நாட்களில் ரூ.300 கோடியை வசூலித்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனமாக லைகா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ஒருமாதம் கடந்து விட்ட நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் ஓ.டி.டி. தளத்தில் படம் வெளியிடப்பட்டுள்ளது.


Next Story