திருமண ரத்து வதந்திக்கு நடிகை பூர்ணா விளக்கம்


திருமண ரத்து வதந்திக்கு நடிகை பூர்ணா விளக்கம்
x

பூர்ணா தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து திருமண ரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழில் 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு "படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். பூர்ணாவுக்கு சில வாரங்களுக்கு முன்பு தொழில் அதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 'குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன், எனது அடுத்த வாழ்க்கை பகுதிக்கு அடியெடுத்து வைக்கிறேன்" என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பூர்ணாவின் திருமணம் நின்று விட்டதாக வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

ரசிகர்கள் பலரும் திருமணம் ரத்தாகி விட்டது உண்மையா? என்று பூர்ணாவிடம் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பூர்ணா தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ''எப்போதும் என்னுடையவர்" என்ற பதிவையும் பகிர்ந்து திருமண ரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதையடுத்து வலைத்தளத்தில் ரசிகர்கள் பூர்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.


Next Story