'வெந்து தணிந்தது காடு' படத்தின் டப்பிங் பணிகளை முடித்தார் சித்தி இத்னானி..!


வெந்து தணிந்தது காடு படத்தின் டப்பிங் பணிகளை முடித்தார் சித்தி இத்னானி..!
x

நடிகை சித்தி இத்னானி 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார்.

சென்னை,

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இத்னானி நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற செப்டம்பர் 15-ம் தேதி 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் நடிகர் சிம்பு டப்பிங் பணியை நிறைவு செய்தது குறித்த அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் நடிகை சித்தி இத்னானி படத்தில் தன்னுடைய டப்பிங் பணியை முடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் கவுதம் மேனனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள அவர், "பாவையின் டப்பிங் முடிந்தது. என்னை நம்பி என்னுடைய கதாபாத்திரத்துக்கு டப்பிங் செய்ய அனுமதித்ததற்கு நன்றி கவுதம் மேனன் சார். நான் ஜிவிஎம் ஹீரோயின் என்பதை இன்னும் நம்ப முடியவில்லை!" என்று கூறியுள்ளார்.


Next Story