காதல் திருமணம் செய்த கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி சின்னத்திரை நடிகை தீபா வழக்கு


காதல் திருமணம் செய்த கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி சின்னத்திரை நடிகை தீபா வழக்கு
x

தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் எனக்கூறி பிரபல சின்னத்திரை நடிகை தீபா சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

பிரபல சின்னத்திரை நடிகை தீபா. இவருக்கு திருமணமாகி விவாகரத்தான நிலையில் தனது மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய கணேஷ் பாபு என்பவரை கடந்த ஆண்டு தீபா 2-வது திருமணம் செய்து கொண்டார். தீபாவும், கணேஷ் பாபுவும் காதலித்த நிலையில், அவர்களின் திருமணத்துக்கு கணேஷ் பாபுவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகு தீபாவின் வீட்டில் இருவரும் வசித்து வந்துள்ளனர். சமீபத்தில் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கணேஷ் பாபு, தீபாவை பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் தீபா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "எனது கணவரின் சகோதரர் ராமகிரி வாசன் தொடர்ந்து மனரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தல் கொடுத்து வந்தார். மேலும், கணேஷ் பாபுவின் குடும்பத்தினர் சாதி ரீதியாக என்னை இழிவுப்படுத்தினர். இதனால் கணவருக்கும், எனக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. தற்போது அவர் பிரிந்து போயுள்ளார். குடும்பத்தினரின் அழுத்தத்தால் பிரிந்துள்ள கணவர் என்னுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறார். இதனால் எங்களை சேர்த்து வைக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story