இந்தி பாடலாசிரியர் குல்சாருக்கு ஞானபீட விருது


இந்தி பாடலாசிரியர்  குல்சாருக்கு ஞானபீட விருது
x

குல்சார் இந்தி பட உலகில் முன்னணி பாடலாசிரியர் ஆவார். சிறந்த உருது கவிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

புகழ்பெற்ற உருது கவிஞர் குல்சார் , சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராமபத்ராச்சார்யா ஆகியோருக்கு 2023-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கப்படுவதாக தேர்வுக் குழு அறிவித்தது. குல்சார் இந்தி பட உலகில் முன்னணி பாடலாசிரியர் ஆவார். சிறந்த உருது கவிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

2002 -ல் சாகித்ய அகாடமி விருது பெற்ற குல்சார் 2013 -ம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 5 முறை தேசிய திரைப்பட விருதுகளையும் பெற்று இருக்கிறார். மத்தியபிரதேச மாநிலம் சித்திரகூடத்தில் உள்ள துளசி பீடத்தின் தலைவரான ராமபத்ராச்சார்யா, புகழ்பெற்ற இந்து ஆன்மீகத் தலைவர், கல்வியாளர் மற்றும் 100 -க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story