லால்சிங் சத்தா விவகாரம் அமீர்கானை சாடிய நடிகை விஜயசாந்தி


லால்சிங் சத்தா விவகாரம் அமீர்கானை சாடிய நடிகை விஜயசாந்தி
x

லால்சிங் சத்தா விவகாரத்தில் நடிகையும் அரசியல்வாதியுமான விஜயசாந்தி, அமீர்கானை சாடியுள்ளார்.

ஐதராபாத்

ஹாலிவுட்டில் உருவான 'பாரஸ்ட் கேம்ப்' படத்தை இந்தியில், 'லால்சிங் சத்தா' என்ற பெயரில் தயாரித்து நடித்துள்ளார் நடிகர் அமீர்கான். அத்வைத் சந்தன் இயக்கும் இப்படத்தில் நடிகை கரீனா கபூர் நடித்துள்ளாரர். இப்படம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இதனிடையே அண்மையில், 'பாய்காட் லால்சிங் சத்தா' (boycott Laal Singh Chaddha) என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலானது.

காரணம், கடந்த 2015-ம் ஆண்டு பேட்டி ஒன்றில் நடிகர் அமீர்கான் 'இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது' என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவரது படங்கள் வெளியாகும் சமயங்களில் இதுபோன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகின்றன.

இந்த எதிர்ப்புக்கு அமீர்கான் பதிலளித்து பேசிய வர் ஆமாம். உண்மையில் நான் இது குறித்து வருத்தப்படுகிறேன். இப்படியான பிரசாரத்தை பரப்பும் சிலர், இதயபூர்வமாக நான் நாட்டை நேசிக்கவில்லை என நம்புகிறார்கள் என நினைக்கிறேன். ஆனால், அது உண்மைக்குப் புறம்பானது. சிலர் அப்படி நினைப்பது துரதிர்ஷ்டவசமானது. அப்படி இல்லை. தயவுசெய்து என் படத்தைப் புறக்கணிக்காதீர்கள். தயவு செய்து என் படத்தைப் பாருங்கள்'' என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், நடிகையும் அரசியல்வாதியுமான விஜயசாந்தி, அமீர்கானை சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், ''2015 ஆம் ஆண்டில் இந்தியா சகிப்புத்தன்மையற்றதாக மாறிவிட்டதாக கூறிய அமீர்கான் அப்போதைய தனது மனைவி கிரண் ராவுடன் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நாட்டை விட்டு வெளியேற விரும்பினார். இந்தியாவில் அரசு மற்றும் தனியார் அமைப்புகளில் இந்துக்கள் அல்லாதவர்கள் பெரிய பதவிகளைப் பெற்றுள்ளனர்.

இதற்கு முன்பும், பின்பும், இன்றும் இந்த நாடு மத நல்லிணக்கத்துடன் அனைவரையும் மதிக்கிறது. பாலிவுட்டில் அமீர் உட்பட உரிய மரியாதையைப் பெற்று வரும் கான் மூவரும் இதற்கு ஒரு பெரிய உதாரணம். ஆனால், உண்மையை அறிந்தவர்கள் அமீரின் கருத்தை நிராகரித்துள்ளனர்.

அமீர்கானின் பிகே திரைப்படம் இந்துக்களுக்கு எதிரானது மட்டுமல்ல. இந்துக் கடவுள்களை இழிவுப்படுத்திய படம். அப்போது இந்து அமைப்புகள் பிகேவை தடை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர். தற்போது 'லால் சிங் சத்தாவை புறக்கணிக்க வேண்டும்' (boycott Laal Singh Chaddha) என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.




Next Story