‘பாதுகாப்பு தொல்லை’ கொடுக்காத மும்பை கதாநாயகி!


‘பாதுகாப்பு தொல்லை’ கொடுக்காத மும்பை கதாநாயகி!
x
தினத்தந்தி 13 Jun 2021 4:32 AM GMT (Updated: 13 Jun 2021 4:32 AM GMT)

‘லாக்கப்’ படத்தை அடுத்து நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா தனது மூன்றாவது படத்தை தயாரிக்கிறார்.

காதல் கண்டிஷன்ஸ் அப்ளை படத்தில் மஹத் ராகவேந்திரா, சனா மக்புல்.
‘லாக்கப்’ படத்தை அடுத்து நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா தனது மூன்றாவது படத்தை தயாரிக்கிறார். இந்த படத்துக்கு அவர், ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

‘‘அது என்ன...காதல் கண்டிஷன்ஸ் அப்ளை...?’’ என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் நிதின் சத்யா அளித்த பதில்:- ‘இது, முழுக்க முழுக்க காதல் படம். ஆனால், இதுவரை வராத காதல் கதை. பொதுவாக காதலுக்கு ‘ஈகோ’தான் வில்லனாக இருக்கும். அந்த வில்லன் இந்த படத்தில் இல்லை. தனது காதலை தெரிவிக்கும் கதாநாயகனிடம், கதாநாயகி சில நிபந்தனைகளை விதிக்கிறாள். அது என்ன நிபந்தனை? என்பதே கதை. கதாநாயகி திருச்சியில் இருக்கிறார். அவர் சென்னைக்கு வந்ததும் காதல் பிரச்சினை குறுக்கிடுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

மஹத் ராகவேந்திரா, மும்பை அழகி சனா மக்புல் இருவரும் காதல் ஜோடியாக நடித்துள்ளனர். ஆர்.அரவிந்த் டைரக்டு செய்திருக்கிறார். மும்பை நடிகைகள் என்றாலே பாதுகாவலர்களுடன் படப்பிடிப்புகளுக்கு வருவார்கள். சனா மக்புல் எப்படி வந்தார்? சனாவை பொறுத்தவரை பாதுகாப்பு படை கேட்டு தொல்லை கொடுக்கவில்லை. நான் கொடுக்கவும் மாட்டேன்’’ என்கிறார், நிதின் சத்யா.

Next Story