‘துப்பறிவாளன் 2’ மீண்டும் தொடங்குவது எப்போது? - விஷால் விளக்கம்


‘துப்பறிவாளன் 2’ மீண்டும் தொடங்குவது எப்போது? - விஷால் விளக்கம்
x
தினத்தந்தி 3 Nov 2021 4:40 PM GMT (Updated: 3 Nov 2021 4:40 PM GMT)

கடந்த ஓராண்டாக ‘துப்பறிவாளன் 2’ குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் இருந்த விஷால், தற்போது அதுகுறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தில் ஒரு நேர்மையான டிடெக்டிவ் அதிகாரியாக விஷால் மற்றும் பிரசன்னா நடித்திருப்பார்கள். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினர்.

இதன் இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமியும் நடித்துள்ளனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்தது. இதையடுத்து விஷாலுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இப்படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார்.

இதனால் மீதிப் படத்தை தானே இயக்க உள்ளதாக விஷால் கடந்தாண்டு அறிவித்தார். இதையடுத்து, இப்படம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், எனிமி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஷால், ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்டையும் வெளியிட்டு உள்ளார். அதன்படி ‘துப்பறிவாளன் 2’ படத்தை ஜனவரியில் மீண்டும் தொடங்கவுள்ளதாகவும், ஏப்ரலில் படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

Next Story