நடிகர் பாரதி மணி மரணம்

பிரபல நடிகரும், எழுத்தாளருமான பாரதிமணி வயது மூப்பு காரணமாக சென்னையில் மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது 84. பாரதி மணியின் சொந்த ஊர் நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரம். ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவில் அறிமுகமாகி குணச்சித்திர வேடங்களில் நடித்தார். மணி என்ற இயற்பெயரை கொண்ட இவர் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு படமான பாரதி படத்தில் பாரதியாருக்கு தந்தையாக நடித்ததால் பாரதி மணி என்று அழைக்கப்பட்டார். இவரது வித்தியாசமான குரல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். ரஜினிகாந்தின் பாபா, விக்ரமின் அந்நியன், சேரனின் ஆட்டோகிராப், தனுசின் புதுப்பேட்ைட மற்றும் ஒருத்தி, ஊருக்கு நூறுபேர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களில் பாரதிமணி நடித்து இருக்கிறார்.
கடைசியாக மாதவனின் மாறா படத்தில் நடித்து இருந்தார். "புள்ளிகள், கோடுகள், கோலங்கள்" ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’, பாட்டையாவின் பழங்கதைகள் உள்ளிட்ட புத்தகங்களும் எழுதியுள்ளார். இலக்கிய உலகில் 'பாட்டையா' என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார். பாரதி மணி மறைவுக்கு திரையிலகினரும் எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story