சுட்டுப்பிடிக்க உத்தரவு


சுட்டுப்பிடிக்க உத்தரவு
x
தினத்தந்தி 10 Sep 2018 5:12 PM GMT (Updated: 10 Sep 2018 5:12 PM GMT)

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தை டைரக்டு செய்தவர், ராம்பிரகாஷ் ராயப்பா. இவர், அந்த படத்தை அடுத்து, ‘போக்கிரி ராஜா’ படத்தை டைரக்டு செய்தார்.

ராஜ்கிரணுடன் இணைகிறார், ராம்பிரகாஷ் ராயப்பா!

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தை டைரக்டு செய்தவர், ராம்பிரகாஷ் ராயப்பா. இவர், அந்த படத்தை அடுத்து, ‘போக்கிரி ராஜா’ படத்தை டைரக்டு செய்தார். தற்போது, ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. இதையடுத்து ராம்பிரகாஷ் ராயப்பா ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இதில், ராஜ்கிரண் நடிக்கிறார்.

தனுஷ் டைரக்டு செய்த ‘பவர் பாண்டி’ படத்தில், ‘பவர் பாண்டி’யாக ராஜ்கிரண் நடித்தார். அந்த படத்து க்குப்பின்,சண்டக் கோழி-2’ ‘படத்தில் நடித்தார். அதைய டுத்து ‘ராம்பிரகாஷ் ராயப்பா’ டைரக்‌ஷ னில் உருவாகும் புதிய படத்தில், ஒரு முக்கிய வேடத்தில், ராஜ்கிரண் நடிக்க சம்மதித்து இருக் கிறார். அவருடன், டி.வி. புகழ் ரக்‌ஷன் நடிக்கிறார். மற்ற நடிகர்-நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இது, நவீன தொழில்நுட்பத்தை விரிவாக அலசும் படமாக உருவாகிறது. கல்பத்தரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கிறார்.

Next Story