புதிய படத்தின் தலைப்பை அறிவித்த இயக்குநர் பண்டி சரோஜ்குமார்


புதிய படத்தின் தலைப்பை அறிவித்த இயக்குநர் பண்டி சரோஜ்குமார்
x
நடிகர்: பண்டி சரோஜ்குமார்,மோகன் சேனாபதி நடிகை: அனாமிகா, கிரிட்டி  டைரக்ஷன்: பண்டி சரோஜ்குமார் இசை: பண்டி சரோஜ்குமார் ஒளிப்பதிவு : பண்டி சரோஜ்குமார்

2010 ஆம் ஆண்டு வெளியான 'போர்க்களம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பண்டி சரோஜ்குமார். மிரட்டலான மேக்கிங் மூலம் முதல் படத்திலேயே ஒட்டு மொத்த கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்ததோடு, பத்திரிகையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார்.

இதற்கிடையே, இயக்குநர் பண்டி சரோஜ்குமாரின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், கடந்த ஆண்டு "கலை எனது, விலை உனது" என்ற கருத்தோடு டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியான 'மாங்கல்யம்' என்ற திரைப்படத்தை இயக்கியதோடு, அப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார்.

இயக்குநராக ஏற்கனவே பாராட்டு பெற்ற பண்டி சரோஜ்குமார், தற்போது நடிகராகவும் ரசிகர்களிடம் தனக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, புதிய படம் ஒன்றை இயக்கி தயாரிப்பதோடு, அதில் நாயகனாகவும் நடிக்கிறார். 'பி.எஸ்.கே மெயின்ஸ்ட்ரீம்' என்ற நிறுவனம் சார்பில் பண்டி சரோஜ்குமார் தயாரித்து, இயக்கி நடிக்க இருக்கும் படத்திற்கு 'பராக்ரமம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. "I ME MYSELF" என்ற டேக்லைன் கொண்ட 'பராக்ரமம்' படத்தின் தலைப்பை அசத்தலான டீசர் மூலம் பண்டி சரோஜ்குமார் அறிவித்துள்ளார்.

இந்த படத்தை நான் இயக்கி, தயாரித்து, நாயகனாக நடிப்பதோடு, இசை மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் நானே செய்யப் போகிறேன். மேலும், என்னுடன் பல திறமையான புதுமுக நடிகர், நடிகைகள் இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார்கள் என பண்டி சரோஜ்குமார் கூறினார். பண்டி சரோஜ்குமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அனாமிகா, கிரிட்டி, மோகன் சேனாபதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

பி.எஸ்.கே மெயின்ஸ்ட்ரீம்' நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்கி நடிப்பதோடு, இசை, படத்தொகுப்பு ஆகிய பணிகளையும் பண்டி சரோஜ்குமாரே கவனிக்கிறார். தற்போது படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகளில் ஈடுபட்டுள்ள இயக்குநர் பண்டி சரோஜ்குமார், செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்கி, அக்டோபர் மாதத்திற்குள் இரண்டு கட்டங்களாக 30 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்து, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.


Next Story