கங்கை- கோதாவரி, கிருஷ்ணா, காவிரி நதிகள் இணைப்பு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்


கங்கை- கோதாவரி, கிருஷ்ணா, காவிரி நதிகள் இணைப்பு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 1 Feb 2022 6:14 AM GMT (Updated: 1 Feb 2022 8:16 AM GMT)

3.8 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க ரூ.16,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதுடெல்லி,

2022-23 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: 
  • கங்கை- கோதாவரி, கிருஷ்ணா, காவிரி நதிகள் இணைப்பு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது
  • சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி கிடைத்தவுடன் நதிகள் இணைப்பு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் 
  • ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும் - நிதியமைச்சர் 
  • ட்ரோன்கள் மூலம் பயிர்களை ஆய்வு செய்ய திட்டம் - நிதியமைச்சர்
  • நாடு முழுவதும் ரசாயனம் இல்லா இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்
  • பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 18 லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ48,000 கோடி ஒதுக்கீடு
  • 3.8 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க ரூ60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு 
  • வடகிழக்கு மாநில மேம்பாட்டிற்கு ரூ. 1,500 கோடி ஒதுக்கீடு
  • இந்தியாவில் தொடரந்து ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது
  • 25 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி  மையங்கள் அமைக்கப்படும்.
  • மின்னணு பாஸ்போர்ட் வசதி அறிமுகப்படுத்தப்படும்

Next Story