ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு


ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 13 April 2019 7:51 PM IST (Updated: 13 April 2019 7:51 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

மொகாலி,

7 ஆட்டங்களில் விளையாடி 4ல் வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் அணி உள்ளூரில் வலுவாக காணப்படுகிறது. இந்த சீசனில் மொகாலியில் ஆடியுள்ள 3 ஆட்டங்களிலும் அந்த அணிக்கு சுபமான முடிவு கிடைத்துள்ளது. அந்த ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட பஞ்சாப் அணியினர் தீவிர முனைப்பு காட்டுவார்கள். 

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இதுவரை ஆடியுள்ள 6 ஆட்டங்களிலும் தோல்வியே சந்தித்துள்ளது. இந்த சீசனில் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணி பெங்களூரு தான். ஒரு ஆட்டத்தில் 205 ரன்கள் குவித்த போதிலும் சறுக்கலே மிஞ்சியது. திறமையான வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்களை எப்படி பயன்படுத்தி, வெற்றியை வசப்படுத்துவது என்பது தான் கோலிக்கு இப்போது உள்ள ஒரே சவால் ஆகும். அது மட்டுமின்றி எஞ்சிய 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். அதனால் பெங்களூரு அணிக்கு இது கிட்டதட்ட வாழ்வா? சாவா? மோதல் ஆகும். 5 நாள் ஓய்வுக்கு பிறகு கோலி படையினர் இறங்குவதால் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்நிலையில் மொகாலியில் இன்று நடைபெறும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இத்தொடரில் இதுவரை 6 போட்டிகளில் ஆடியுள்ள விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி, ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story