ஐபிஎல் தொடரில் இருந்து கிறிஸ் கெயில் விலகல்


ஐபிஎல் தொடரில் இருந்து கிறிஸ் கெயில் விலகல்
x
தினத்தந்தி 30 Sep 2021 8:14 PM GMT (Updated: 30 Sep 2021 8:14 PM GMT)

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் கிறிஸ் கெயில் விலகியுள்ளார்.

அபுதாபி,

நடப்பு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அதில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி 4 வெற்றி, 7 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இனி வரும் அனைத்து போட்டிகளும் பஞ்சாப் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

தொடர்ந்து கடந்த சில மாதங்களாக வெஸ்ட் இண்டீஸ் அணி, கரீபியன் பிரிமியர் லீக் தொடர், ஐபிஎல் தொடரில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுக்குள் (பயோ-பபுள்) இருந்துள்ளதால் மனரீதியில் புத்துணர்வு பெற முடிவு செய்துள்ளேன். 

மேலும், டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்த உள்ளேன். இதனால், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன் என்று கிறிஸ் கெயில் அறிவித்துள்ளார்.

Next Story