ஐபிஎல்- ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
மும்பை,
ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 34-வது லீக் போட்டியில் டெல்லி - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன .
ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணி இந்த தொடரில் விளையாடிய 6 போட்டியில் 3 ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது . சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி இந்த தொடரில் விளையாடிய 6 போட்டியில் , 4ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது.
இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
Related Tags :
Next Story