ஐபிஎல்- பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
மும்பை,
10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என்று மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும்.
லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அடுத்த சுற்றை எட்ட குறைந்தது 8 வெற்றிகள் தேவைப்படும்.
நவி மும்பையில் உள்ள டி ஒய் பாட்டில் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ள 48-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். வழக்கமாக இரவு நடைபெறும் போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன்கள் பந்துவீச்சை தேர்வு செய்து வரும் நிலையில் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story