அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்


அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 28 Feb 2017 10:45 PM GMT (Updated: 1 March 2017 12:55 PM GMT)

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

திருச்சி,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தன. இதில் ஓட்டப்பந்தயம், நீளம்தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகளும், இறகுப்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, மேஜைப்பந்து, டென்னிஸ், கால்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் சீருடை பணியாளர்கள் தவிர, பல்வேறு அரசுத்துறைகளை சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் 180 பேர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் முதல் இடத்தை பெற்றவர்கள் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். 

Next Story