ஆண்டாள் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


ஆண்டாள் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 1 April 2017 11:00 PM GMT (Updated: 1 April 2017 7:38 PM GMT)

ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வருடந்தோறும் பங்குனிமாதம் உத்திரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த வருடத்துக்கான திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது.

இதனை முன்னிட்டு நேற்று காலை 4 ரத வீதி வழியாக கொடி எடுத்து வரப்பட்டு கோவிலை வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டதோடு ஆண்டாள்-ரெங்கமன்னாருக்கு திருமஞ்சனம் நடந்தது. அதன்பிறகு கோவிந்தாச்சாரி பட்டர் கொடியேற்றி வைத்தார். இதில் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி ராமராஜா, ஆண்டாள் சொக்கலிங்கம் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். தொடர்ந்து 9-ந் தேதி வரை ஆண்டாள்-ரெங்கமன்னார் வீதி உலா நடைபெறுகிறது.

திருக்கல்யாணம்

முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள் திருக்கல்யாணம் பங்குனி உத்திரமான 9-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு கீழ ரதவீதியில் சிறிய செப்புத்தேரில் ஆண்டாள்-ரெங்கமன்னார் பவனி நடக்கிறது. மாலை 4 மணிக்கு கன்னிகாதானம் நடைபெறுகிறது.

இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கிறது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்படுகிறது.

Next Story