ஆம்பூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி சிறுமி உள்பட 2 பேர் படுகாயம்


ஆம்பூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி சிறுமி உள்பட 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 10 April 2017 10:47 PM IST (Updated: 10 April 2017 10:46 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே ஆண்டியப்பனூர் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 62)

ஆம்பூர்,

வாணியம்பாடி அருகே ஆண்டியப்பனூர் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 62), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி லலிதா (55). இவர்களுடைய பேத்தி ஜீவிதா (5). இவர்கள் 3 பேரும் நேற்று ஆம்பூரில் உள்ள ராணுவ கேன்டீனில் பொருட்களை வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினர்.

ஆம்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது வேலூர் நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். லலிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கருணாகரன், சிறுமி ஜீவிதா ஆகியோர் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story