மத்திய அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2017 4:00 AM IST (Updated: 2 Jun 2017 3:01 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து நாகையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

மாடு, எருது, காளை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கக்கூடாது, வெட்டக்கூடாது என்று அறிவித்துள்ள மத்திய அரசை கண்டித்து மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் நாகை புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செய்யதுரியாசுதீன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி செயலாளர் செய்யதுமுபாரக், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர்பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர் ஷேக்அப்துல்லா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மாடு, எருது, காளை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கக்கூடாது, வெட்டக்கூடாது என்று அறிவித்துள்ள மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்த மிருகவதை தடுப்பு சட்டத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட துணை செயலாளர் ஹமீதுஜெகபர், மாவட்ட பொருளாளர் பரக்கத்அலி, மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர் ஷேக்மன்சூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story