ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக பதாகைகளை ஏந்தி பொதுமக்கள் போராட்டம்


ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக பதாகைகளை ஏந்தி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2017 10:45 PM GMT (Updated: 8 Jun 2017 9:16 PM GMT)

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக பதாகைகளை ஏந்தி நெடுவாசலில் பொதுமக்கள் போராட்டம்

வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த மாதம் 12-ந் தேதி முதல் 2-ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். அதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்களை நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 58-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் பொதுமக்கள் பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். 

Next Story