நெடுவாசலில் இலையில் மண்ணைக் கொட்டி பொதுமக்கள் நூதன போராட்டம்


நெடுவாசலில் இலையில் மண்ணைக் கொட்டி பொதுமக்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 7 Aug 2017 11:00 PM GMT (Updated: 7 Aug 2017 9:06 PM GMT)

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இலையில் மண்ணைக் கொட்டி பொதுமக்கள் நூதன போராட்டத்தை நடத்தினர்.

வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி 2-வது கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். அதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 118-வது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது. அதில், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து, நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தி அப்பகுதி மக்களின் வயிற்றில் மண்ணை போட்டுவிடவேண்டாம் என்பதை அரசுக்கு உணர்த்தும் விதமாக போராட்டக்களத்தில் இலையைபோட்டு அதில் மண்ணைக் கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Related Tags :
Next Story