ராஜாக்கமங்கலம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

ராஜாக்கமங்கலம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜாக்கமங்கலம்
ராஜாக்கமங்கலம் அருகே சட்டுவன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 33). இவர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவர்களுக்கு தற்போது 2½ வயதில் ஒரு மகன் உண்டு.
மனைவி இறந்த பின்பு கண்ணன் துக்கம் தாங்க முடியாமல் மது பழக்கத்திற்கு அடிமையானார். வாழ்க்கையில் வெறுப்படைந்து சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு கண்ணன் வழக்கம் போல் தனது அறையில் தூங்க சென்றார். நேற்று காலையில் வெகு நேரமாகியும் அவரது அறை திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை தட்டி அழைத்தனர். ஆனால், உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை.
இதையடுத்து உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கண்ணன் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார். மனைவி இறந்த துக்கத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.