கும்பகோணம் பகுதியில் பலத்த மழை: கோவில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது


கும்பகோணம் பகுதியில் பலத்த மழை: கோவில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 9 Sep 2017 10:30 PM GMT (Updated: 9 Sep 2017 9:21 PM GMT)

கும்பகோணம் பகுதியில் பலத்த மழை: கோவில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் மார்கெட் அருகே மல்லுக தெருவில் சந்தானகோபாலகிருஷ்ணன் கோவில் உள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவில் குளத்திற்கு கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற மகாமக விழாவின் போது ரூ.21 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இந்த நிலையில் கும்பகோணம் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் சந்தானகோபாலகிருஷ்ணன் கோவில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. 50 மீட்டர் அளவில் சுவர் இடிந்து விழுந்தது. இதை தொடர்ந்து அறநிலையத்துறையினர் அந்த பகுதியில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்லாதவாறு தடுப்புகளை அமைத்தனர். 

Related Tags :
Next Story