சேலத்தில் கடன் தொல்லையால் விபரீதம்: தச்சுத்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

சேலத்தில் கடன் தொல்லையால் தச்சுத்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலை பார்த்து மனைவி, மகள்கள் கதறி அழுதனர்.
சேலம்,
சேலம் அங்கம்மாள் காலனி 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 46), தச்சுத்தொழிலாளி. இவருடைய மனைவி கலைவாணி. இவர்களுக்கு நித்தியகல்யாணி, நந்தினி என்ற 2 மகள்கள் உள்ளனர். செல்வம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் மற்றும் குடும்ப செலவுக்காக கிச்சிப்பாளையத்தை சேர்ந்த நண்பர் ஒருவரிடம் ரூ.65 ஆயிரம் கடன் வாங்கினார். மேலும், அவர் வேறு சிலருக்காக அதே நண்பரிடம் இருந்து கடன் வாங்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் நண்பருக்கு கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். வாங்கிய பணத்தை அவர் நண்பருக்கு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் கடன் கொடுத்த நண்பர், செல்வம் மீது பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் செல்வத்தை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கடந்த 11-ந்தேதிக்குள் பணத்தை கொடுத்து விடுவதாக போலீசாரிடம் அவர் உறுதியளித்தார்.
ஆனால், குறிப்பிட்ட தேதிக்குள் பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த நண்பர், செல்வம் வீட்டுக்கு சென்று பணம் கேட்டுள்ளார். நேற்று காலையும் அவர் சிலருடன் செல்வம் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் செல்வத்தை தகாத வார்த்தையால் திட்டியதுடன் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் வீட்டில் தலைதீபாவளிக்காக அழைத்து வந்த மகள், மருமகன் உள்பட அனைவரும் இருந்தனர்.
இதனால் மனவேதனை அடைந்த செல்வம், நான் இருந்தால் தானே பணம் கேட்பாய்? என்று கூறிவிட்டு வீட்டில் இருந்த ஒரு அறைக்கு வேகமாக சென்று கதவை பூட்டிக்கொண்டார். மேலும் அவர் தனது மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வத்தின் உடலை பார்த்து மனைவி மற்றும் மகள்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. கடன் தொல்லையால் தச்சுத்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அங்கம்மாள் காலனி 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 46), தச்சுத்தொழிலாளி. இவருடைய மனைவி கலைவாணி. இவர்களுக்கு நித்தியகல்யாணி, நந்தினி என்ற 2 மகள்கள் உள்ளனர். செல்வம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் மற்றும் குடும்ப செலவுக்காக கிச்சிப்பாளையத்தை சேர்ந்த நண்பர் ஒருவரிடம் ரூ.65 ஆயிரம் கடன் வாங்கினார். மேலும், அவர் வேறு சிலருக்காக அதே நண்பரிடம் இருந்து கடன் வாங்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் நண்பருக்கு கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். வாங்கிய பணத்தை அவர் நண்பருக்கு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் கடன் கொடுத்த நண்பர், செல்வம் மீது பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் செல்வத்தை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கடந்த 11-ந்தேதிக்குள் பணத்தை கொடுத்து விடுவதாக போலீசாரிடம் அவர் உறுதியளித்தார்.
ஆனால், குறிப்பிட்ட தேதிக்குள் பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த நண்பர், செல்வம் வீட்டுக்கு சென்று பணம் கேட்டுள்ளார். நேற்று காலையும் அவர் சிலருடன் செல்வம் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் செல்வத்தை தகாத வார்த்தையால் திட்டியதுடன் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் வீட்டில் தலைதீபாவளிக்காக அழைத்து வந்த மகள், மருமகன் உள்பட அனைவரும் இருந்தனர்.
இதனால் மனவேதனை அடைந்த செல்வம், நான் இருந்தால் தானே பணம் கேட்பாய்? என்று கூறிவிட்டு வீட்டில் இருந்த ஒரு அறைக்கு வேகமாக சென்று கதவை பூட்டிக்கொண்டார். மேலும் அவர் தனது மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வத்தின் உடலை பார்த்து மனைவி மற்றும் மகள்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. கடன் தொல்லையால் தச்சுத்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story