தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக மழை கும்பகோணத்தில் அதிகபட்சமாக 91 மி.மீ. பதிவானது


தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக மழை கும்பகோணத்தில் அதிகபட்சமாக 91 மி.மீ. பதிவானது
x
தினத்தந்தி 31 Oct 2017 10:30 PM GMT (Updated: 31 Oct 2017 8:28 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. கும்பகோணத்தில் அதிகபட்சமாக 91 மி.மீ. பதிவானது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை கொட்டியது. நேற்று 2-வது நாளாகவும் மழை பெய்தது.

காலை 10 மணிக்கு பின்னர் மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. மதியத்துக்குப்பின்னர் மழை பெய்யத்தொடங்கியது. இதே போல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக கும்பகோணத்தில் 91 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது.

தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் நடவுப்பணிகள் பாதிக்கப்பட்டன.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அதிராம்பட்டினம் 49.5, கும்பகோணம் 91, பாபநாசம் 59, தஞ்சாவூர் 21, திருவையாறு 29, திருக்காட்டுப்பள்ளி 18.2, வல்லம் 39, கல்லணை 7.2, அய்யம்பேட்டை 46, திருவிடை மருதூர் 74.4, மஞ்சளாறு 79.8, நெய்வாசல் தென்பாதி 34.6, பூதலூர் 15.6, வெட்டிக்காடு 25, ஈச்சன்விடுதி 10.2, ஒரத்தநாடு 30.7, மதுக்கூர் 55.8, பட்டுக்கோட்டை 47.4, பேராவூரணி 14, அணைக்கரை 84.6, குருங்குளம் 15.


Related Tags :
Next Story