தனியார் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

பெங்களூருவில், தனியார் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானது.
பெங்களூரு,
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் திடீரென்று தொழிற்சாலையில் தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. மேலும் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த துணிகள் தீப்பிடித்து எரிந்தது. இதனால் தொழிற்சாலையில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மேலும் 8 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தொழிற்சாலையில் பிடித்த தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் 5 மணிநேர போராட்டத்தை தொடர்ந்து தொழிற்சாலையில் பிடித்த தீ அணைக்கப்பட்டது.
Related Tags :
Next Story