தூத்துக்குடி மாவட்டத்தில், 24–ந்தேதி அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்


தூத்துக்குடி மாவட்டத்தில், 24–ந்தேதி அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
x
தினத்தந்தி 18 Nov 2017 8:30 PM GMT (Updated: 18 Nov 2017 1:26 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 24–ந்தேதி அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 24–ந்தேதி அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

அம்மா திட்ட முகாம்


தமிழகத்தில் அனைத்து கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு சேவை வழங்க தமிழக அரசால் அம்மா திட்ட முகாம் அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த முகாம், வருகிற 24–ந்தேதி (வெள்ளிக்கிழமை) கீழ்க்கண்ட கிராமங்களில் நடத்தப்பட உள்ளது.

தூத்துக்குடி தாலுகாவில் முடிவைத்தானேந்தல், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் ஆழ்வார்கற்குளம், திருச்செந்தூர் தாலுகாவில் பள்ளிப்பத்து, சாத்தான்குளம் தாலுகாவில் கொம்மடிக்கோட்டை, கோவில்பட்டி தாலுகாவில் ஊத்துப்பட்டி, விளாத்திகுளம் தாலுகாவில் சக்கம்மாள்புரம், எட்டயபுரம் தாலுகாவில் அயன்கரிசல்குளம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் சிந்தலகட்டை, கயத்தாறு தாலுகாவில் அகிலாண்டபுரம் ஆகிய கிராமங்களில் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட உள்ளது.

மனுக்கள்

இந்த முகாமில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு–இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள் மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

Next Story