திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் சாவு


திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் சாவு
x
தினத்தந்தி 18 Nov 2017 10:45 PM GMT (Updated: 18 Nov 2017 5:41 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் பலியானார்கள்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் மெய்யூர் கிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 60). தனியார் பஸ் டிரைவர். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், தேவி, செல்வி என்ற மகள்களும் உள்ளனர். சிவலிங்கத்துக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது.

காய்ச்சல் அதிகரிக்கவே 3 நாட்களுக்கு முன்னர் அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சிவலிங்கம் பரிதாபமாக இறந்து போனார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் லோகேஸ்வரி (18) மாதர்பாக்கம் கிராமத்தில் பிளஸ்–2 படித்து விட்டு வீட்டில் இருந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு லோகேஸ்வரி காய்ச்சலால் அவதிப்பட்டார். இதையடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று லோகேஸ்வரி பரிதாபமாக இறந்து போனார்.

மர்ம காய்ச்சலால் 2 பேர் இறந்து போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story