தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Nov 2017 8:30 PM GMT (Updated: 30 Nov 2017 1:15 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

அம்மா திட்ட முகாம்

அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அம்மா திட்ட முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாரத்துக்கான முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இடங்கள்

தூத்துக்குடி தாலுகா கூட்டுடன்காடு கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா வாழவல்லான் கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகா கச்சனாவிளையிலும், சாத்தான்குளம் தாலுகா நடுவக்குறிச்சியிலும், கோவில்பட்டி தாலுகா ஜமீன்தேவர்குளத்திலும், விளாத்திகுளம் தாலுகா சுப்பையாபுரம் – சுந்தரபச்சையாபுரம் கிராமத்திலும், எட்டயபுரம் தாலுகா சின்னமலைக்குன்று கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகா சில்லாநத்தத்திலும், கயத்தார் தாலுகா எஸ்.குமரெட்டையாபுரம் கிராமத்திலும் முகாம் நடக்கிறது.

இந்த முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு–இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள் மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.


Next Story