அனுமதி பெறாமல் இயங்கி வந்த பாரா மெடிக்கல் கல்லூரிக்கு சீல் போலி டாக்டர் கைது

திருத்துறைப்பூண்டியில் அனுமதி பெறாமல் இயங்கி வந்த பாரா மெடிக்கல் கல்லூரிக்கு சீல் வைக்கப் பட்டது. மேலும், போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மேலவீதி பெரிய கோவில் அருகில் பாரா மெடிக்கல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இதில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியை நடத்தி வரும் கோட்டூரை சேர்ந்த எழில்மோகன் (வயது 45) என்பவர் மருத்துவம் படிக்காமல் ஓமியோபதி முறையில் நோயாளிகளுக்கு கிசிச்சை அளிப்பதாக திருவாரூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனருக்கு புகார் வந்தது.
அதன்பேரில் திருவாரூர் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் செந்தில்குமார், மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதம், திருத் துறைப்பூண்டி தாசில்தார் மகேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன் ஆகியோர் பாரா மெடிக்கல் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் பாரா மெடிக்கல் கல்லூரி நடத்த எந்த அனுமதி பெறாமலும், உரிய மருத்துவம் படிக்காமல் எழில்மோகன் ஓமியோபதி சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பாரா மெடிக்கல் கல்லூரிக்கு சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில்குமார் சீல் வைத்தார். மேலும், போலி டாக்டர் எழில்மோகன் மீது திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து எழில்மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மேலவீதி பெரிய கோவில் அருகில் பாரா மெடிக்கல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இதில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியை நடத்தி வரும் கோட்டூரை சேர்ந்த எழில்மோகன் (வயது 45) என்பவர் மருத்துவம் படிக்காமல் ஓமியோபதி முறையில் நோயாளிகளுக்கு கிசிச்சை அளிப்பதாக திருவாரூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனருக்கு புகார் வந்தது.
அதன்பேரில் திருவாரூர் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் செந்தில்குமார், மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதம், திருத் துறைப்பூண்டி தாசில்தார் மகேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன் ஆகியோர் பாரா மெடிக்கல் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் பாரா மெடிக்கல் கல்லூரி நடத்த எந்த அனுமதி பெறாமலும், உரிய மருத்துவம் படிக்காமல் எழில்மோகன் ஓமியோபதி சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பாரா மெடிக்கல் கல்லூரிக்கு சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில்குமார் சீல் வைத்தார். மேலும், போலி டாக்டர் எழில்மோகன் மீது திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து எழில்மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story