ஊத்துக்கோட்டை அருகே பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை


ஊத்துக்கோட்டை அருகே பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 18 Dec 2017 10:30 PM GMT (Updated: 18 Dec 2017 8:26 PM GMT)

ஊத்துக்கோட்டை அருகே பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள ரங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). விவசாயியான இவர், நீண்ட நாட்களாக உடல் நிலை சரி இல்லாமல் இருந்து வந்தார். இதற்காக பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் பலன் இல்லை.

இதனால் மனம் உடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(வி‌ஷம்) எடுத்து குடித்து விட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story