ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற கோரி கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி வணிகர்கள் போராட்டம்


ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற கோரி கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி வணிகர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2018 10:45 PM GMT (Updated: 1 Jan 2018 9:30 PM GMT)

ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற கோரி கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி வணிகர்கள் போராட்டம்நடத்தினர்.

தஞ்சாவூர்,

இந்தியாவில் சில்லறை வணிகத்தை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ள வாட்வரி, ஜி.எஸ்.டி. வரி, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் போன்ற சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய கோரியும், உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற கோரியும் கடைகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தப் படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்து இருந்தது. அதன்படி ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று தஞ்சை கீழவாசல் சரபோஜிமார்க்கெட், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், பள்ளியக்கிரகாரம், கரந்தை பூக்காரத்தெரு, ரெயிலடி ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது.

மாநாடு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் ரமேஷ், நகர தலைவர் சேதுராமன், நகர பொருளாளர் கருப்பையா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட இணைச் செயலாளர்கள் பெருமாள், குமரேசன், நிர்வாகிகள் பேச்சுமுத்து, பஞ்சநாதன், செல்வக்குமார், முருகானந்தம், துரைராஜ் மற்றும் நிர்வாகிகள் ஒவ்வொரு கடைக்கும் நேரில் சென்று கருப்புக்கொடியை ஏற்றி வணிகர்களின் வாழ்வுரிமை காக்க ஒன்றுபடுவோம் என்று கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது அவர்கள், வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காந்தி-70 என்ற பெயரில் சென்னையில் சுய தொழிலை காக்க நடைபெறும் மாநாட்டில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் வணிகர்கள் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளதாகதெரிவித்தனர். 

Next Story