பால்வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; 2 வாலிபர்கள் பலி



மும்பை, பிரபாதேவி பகுதியில் உள்ள கிரிதி கல்லூரி அருகே நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டு இருந்தனர்.
மும்பை,
மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அந்த வழியாக சென்ற பால் வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கிவீசப்பட்ட வாலிபர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, பால்வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire