எறும்பு தின்னியை கடத்தி வந்த 2 பேர் கைது


எறும்பு தின்னியை கடத்தி வந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2018 11:54 PM GMT (Updated: 23 Feb 2018 11:54 PM GMT)

தானேயில் எறும்பு தின்னியை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டார்

தானே,

தானேயில் அரியவகை உயிரினங்களை விற்க ஆசாமிகள் வரவுள்ளதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் வாக்ளே எஸ்டேட் பகுதியில் கண்காணித்து வந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் நடந்துசென்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ராய்காட்டை சேர்ந்த அசோக் ஜாதவ்(வயது29), கோலாப்பூரை சேர்ந்த சந்தோஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய சோதனையில், உடைமைகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த எறும்பு தின்னியை பறிமுதல் செய்தனர்.

மேலும் ரூ.40 லட்சத்திற்கு விற்பனை செய்ய வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story