சகோதரர் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை


சகோதரர் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 20 April 2018 9:45 PM GMT (Updated: 20 April 2018 8:46 PM GMT)

சகோதரர் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கல்பாக்கம்,

கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கபட்டினம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட நத்தம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மகள் பவானி (வயது 17). திருக்கழுக்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் தனது கம்மலை அவர் எங்கோயோ தவற விட்டு விட்டார்.

இதை அவரது சகோதரர் கண்டித்தார். இதனால் மன வேதனை அடைந்த பவானி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சதுரங்கபட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story