வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் நெல்லையில், 10-ந் தேதி நடக்கிறது


வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் நெல்லையில், 10-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 24 April 2018 8:30 PM GMT (Updated: 24 April 2018 8:12 PM GMT)

வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் நெல்லையில் வருகிற 10-ந் தேதி நடக்கிறது.

நெல்லை, 

வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் நெல்லையில் வருகிற 10-ந் தேதி நடக்கிறது.

இதுதொடர்பாக உதவி வருங்கால வைப்புநிதி ஆணையாளர் கு.ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தி்ன் அதன் மண்டல ஆணையாளர் சனத் குமார் “வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில்“் (வருங்கால வைப்புநிதி குறை தீ்ர்க்கும்்) எனும் கூட்டத்தை வருகிற 10-ந் தேதி (வியாழக்கிழமை) நடத்த உள்ளார்.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள் மற்றும் தொழில் அதிபர்களின் குறைகள் ஏதேனும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல்் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்ய மனு மூலம் “மண்டல ஆணையாளர்்-ஐ, வருங்கால வைப்புநிதி நிறுவனம், என்.ஜி.ஓ.‘பி‘ காலனி, திருநெல்வேலி-7“ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மனுவின் மேலே “வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில்“ மற்றும் மனுதாரர்களின் தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு வருகிற 30-ந் தேதிக்குள் (திங்கட்கிழமை) இந்த அலுவலகத்திற்கு கிடைக்குமாறு அனுப்புதல் வேண்டும்.

ஆணையாளரை நேரில் சந்திக்கலாம்

வருங்கால வைப்புநிதி உறுப்பினர்களுக்கு காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், தொழில் அதிபர்களுக்கு மாலை 3 மணி முதல் 4 மணி வரையும், வருங்கால வைப்புநிதி விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு 4 மணி முதல் 5 மணி வரையும் கூட்டம் நடக்கிறது.

மனு அனுப்பியவர்கள் 10-ந் தேதி அன்று மேற்கண்ட கால அட்டவணைப்படி மண்டல ஆணையாளரை நேரில் சந்தித்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story