தர்மபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 95.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி


தர்மபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 95.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
x
தினத்தந்தி 23 May 2018 10:45 PM GMT (Updated: 23 May 2018 8:57 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 95.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1.46 சதவீதம் அதிகம் ஆகும்.

தர்மபுரி,

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தர்மபுரி மாவட்ட தேர்வு முடிவுகளை முதன்மை கல்வி அலுவலகத்தில் முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி வெளியிட்டார். மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வை 209 அரசு பள்ளிகள் உள்பட 308 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 187 மாணவர்களும், 10 ஆயிரத்து 544 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 731 பேர் எழுதினார்கள். இவர்களில் 10 ஆயிரத்து 652 மாணவர்களும், 10 ஆயிரத்து 146 மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 798 ஆகும்.

தர்மபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி 95.71 சதவீதமாகும். கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தர்மபுரி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 94.25 ஆக இருந்தது. இந்த ஆண்டு மாணவ-மாணவிகளின் தேர்ச்சி 1.46 சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி 95.22 சதவீதமாகும். மாணவிகளின் தேர்ச்சி 96.23 சதவீதமாகும். கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 93.68 சதவீத மாணவர்களும், 94.87 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்று இருந்தனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி 1.54 சதவீதம் அதிகரித்து உள்ளது. மாணவிகளின் தேர்ச்சி 1.36 சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 1.01 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர். 

Next Story