10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2018 10:15 PM GMT (Updated: 9 Jun 2018 6:51 PM GMT)

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊட்டி,

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) சார்பில், பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை கடந்த 2003–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்த வேண்டும், 7–வது ஊதியக்குழு நிலுவைத்தொகையை மத்திய அரசு போல் தமிழகத்தில் 1.1.2016 முதல் ரொக்கமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சிவா, மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு 7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும், தொடக்கக்கல்வியில் 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மூடுவது அல்லது இணைப்பது என்ற திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஊட்டியில் கொட்டும் மழையிலும் ஜாக்டோ அமைப்பினர் குடைகளை பிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story