‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. மாணவரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. மாணவரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2018 10:15 PM GMT (Updated: 9 Jun 2018 7:22 PM GMT)

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க மாணவரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி,

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தேனி பங்களாமேட்டில் தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார். நகர பொறுப்பாளர் முருகேசன் மற்றும் மாணவரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story