குடும்பத்தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


குடும்பத்தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 Jun 2018 10:30 PM GMT (Updated: 30 Jun 2018 9:23 PM GMT)

குடும்பத்தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளிப்பட்டு,

குடும்பத்தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டை அருகே வீரானத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 32). இவருக்கு தாயம்மாள் (25), என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பூபாலன் ஆர்.கே.பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று கணவன்- மனைவி இடையே வருமானம் போதவில்லை என்பது குறித்து தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த பூபாலன் வீட்டின் பின்புறம் இருந்த மாட்டு தொழுவத்திற்கு சென்றார். நீண்ட நேரமாகியும் கணவர் வராததால் தாயம்மாள் மாட்டு தொழுவத்திற்கு சென்று பார்த்தார்.

அங்கே பூபாலன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று பார்த்தனர். இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பூபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story