ரெயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த டிராவல்ஸ் உரிமையாளர் போலீசார் விசாரணை

கும்பகோணம் அருகே, ரெயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் டிராவல்ஸ் உரிமையாளர் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திரு நாகேஸ்வரம் வடக்கு வீதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் கமாலுதீன்(வயது 35). கார் டிராவல்ஸ் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை கும்பகோணத்தை அடுத்த சுந்தரபெருமாள்கோவில் அருகே ரெயில் தண்டவாளத்தின் நடுவே கமாலுதீன் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே அவர் ஓட்டி வந்த கார் நிறுத்தப்பட்டு இருந்தது. இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள், கும்பகோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கமாலுதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கமாலுதீன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்து தண்டவாளத்தில் போட்டு சென்றனரா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கமாலுதீன் இயற்பெயர் கமல்ராஜ் என்பதும், சில நாட்களுக்கு முன்புதான் தனது பெயரை கமாலுதீன் என்று முஸ்லிம் பெயரை மாற்றி கொண்டது தெரிய வந்தது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திரு நாகேஸ்வரம் வடக்கு வீதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் கமாலுதீன்(வயது 35). கார் டிராவல்ஸ் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை கும்பகோணத்தை அடுத்த சுந்தரபெருமாள்கோவில் அருகே ரெயில் தண்டவாளத்தின் நடுவே கமாலுதீன் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே அவர் ஓட்டி வந்த கார் நிறுத்தப்பட்டு இருந்தது. இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள், கும்பகோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கமாலுதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கமாலுதீன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்து தண்டவாளத்தில் போட்டு சென்றனரா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கமாலுதீன் இயற்பெயர் கமல்ராஜ் என்பதும், சில நாட்களுக்கு முன்புதான் தனது பெயரை கமாலுதீன் என்று முஸ்லிம் பெயரை மாற்றி கொண்டது தெரிய வந்தது.
Related Tags :
Next Story