பள்ளிகளில் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவுக்கு ஏற்பாடு


பள்ளிகளில் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவுக்கு ஏற்பாடு
x
தினத்தந்தி 13 July 2018 10:15 PM GMT (Updated: 13 July 2018 6:58 PM GMT)

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி களில் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டத்தில் 2018-ம் ஆண்டிற்கான பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் 16.7.2018 அன்று வழங்கப்பட உள்ளது.

இதையொட்டி வருகிற 30-ந் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரேபதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளிகளில் இணையதளம் https://tnvelaivaaippu.gov.in வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், சி.பி.எஸ்.இ.பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வி தகுதியை வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் https://tnvelaivaaippu.gov.in தங்கள் அளவிலேயே ஆன்லைனிலோ அல்லது தங்களது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகியோ பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story