இறந்த மாணவியின் உடலை எரித்த தந்தை உள்பட 5 பேர் மீது வழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்காததால் நடவடிக்கை


இறந்த மாணவியின் உடலை எரித்த தந்தை உள்பட 5 பேர் மீது வழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்காததால் நடவடிக்கை
x
தினத்தந்தி 19 July 2018 10:15 PM GMT (Updated: 19 July 2018 5:58 PM GMT)

காரைக்குடி அருகே மாணவி இறந்தது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவருடைய உடலை எரித்ததால் தந்தை உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே சாக்கோட்டை போலீஸ் சரகத்திற்குஉட்பட்ட பெரியகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் காசி மகள் ஷாலினி(வயது16). இவர் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ஷாலினி தனது வீட்டில் உள்ள மாட்டு தொழுவத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை எரித்து விட்டார்களாம்.


இதுகுறித்து அறிந்த சாக்கோட்டை போலீசார் மாணவியின் தந்தை காசி உள்பட 5பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story