தட்டார்மடம் அருகே கட்டிட தொழிலாளி மர்ம சாவு போலீசார் தீவிர விசாரணை


தட்டார்மடம் அருகே கட்டிட தொழிலாளி மர்ம சாவு போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 19 July 2018 9:30 PM GMT (Updated: 19 July 2018 6:35 PM GMT)

தட்டார்மடம் அருகே கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி திடீரென மர்மமான முறையில் மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தட்டார்மடம்,

தட்டார்மடம் அருகே கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி திடீரென மர்மமான முறையில் மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டிட தொழிலாளி

தட்டார்மடம் அருகே பெரியதாழையைச் சேர்ந்த மனுவேல் குரூஸ் மகன் டொய்னர். இவரது வீட்டில் ஆலந்தலையைச் சேர்ந்த முத்து மகன் பாண்டியன் ஒப்பந்த முறையில் கட்டிட பராமரிப்பு பணி மேற்கொண்டு வருகிறார். நேற்று காலையில் பாண்டியன் திருச்செந்தூர் சென்றபோது, அங்கிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், தனது பெயர் ரமேஷ் என்றும், கொத்தனார் வேலை தெரியும் என்று கூறி வேலை கேட்டுள்ளார். உடனே அவரை பாண்டியன் தன்னுடன் வேலைக்கு அழைத்து சென்றார்.

மர்ம சாவு

பெரியதாழையில் மதியம் கட்டிட வேலை செய்தபோது, ரமேஷ் மர்மமான முறையில் திடீரென்று மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த ரமேஷின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்த ரமேஷ் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story