பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 28 July 2018 11:14 PM GMT (Updated: 28 July 2018 11:14 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மத்திய ரெயில்வே வழித்தடமான வித்யாவிகார்- மஸ்ஜித் இடையே ஸ்லோ ரெயில்கள் செல்லும் வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.20 மணி முதல் மாலை 4.20 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10.58 மணி முதல் மாலை 4.24 மணி வரை ஸ்லோ ரெயில்கள் அனைத்தும் வித்யாவிகார்- சி.எஸ்.எம்.டி. இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும்.

இந்த ரெயில்கள் வித்யாவிகார், கரிரோடு, சின்ச்பொக்லி, சன்ஹர்ஸ்ட் ரோடு, மஸ்ஜித் ஆகிய ரெயில்நிலையங்களில் நிற்காது.

இதனால் பயணிகள் அருகில் உள்ள ரெயில்நிலையங்களில் இருந்து கல்யாண் நோக்கி செல்லும் ஸ்லோ ரெயில்களில் இங்கு செல்லலாம்.

துறைமுக வழித்தடத்தில் இன்று காலை 11.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பன்வெல்- வாஷி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 11.06 மணி முதல் மாலை 4.34 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பன்வெல், பேலாப்பூருக்கும், காலை 10.03 மணி முதல் பிறபகல் 3.39 மணிவரை பன்வெல், பேலாப்பூரில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் மின்சார ரெயில்கள் இயக்கப்படாது.

இதேபோல டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்திலும் தானே- பன்வெல் இடையே ரெயில் சேவை இருக்காது. எனினும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் சி.எஸ்.எம்.டி.- வாஷி, தானே- வாஷி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

மேற்கு ரெயில்வேயில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பயந்தர்- வசாய் ரோடு இடையே விரைவு ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் விரைவு ரெயில்கள் அனைத்தும் போரிவிலி- விரார் இடையே இருவழிப்பாதைகளிலும் ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும்.

இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. 

Next Story