செல்போன் செயலி, இணையதளம் மூலம் வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


செல்போன் செயலி, இணையதளம் மூலம் வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 Aug 2018 4:31 AM GMT (Updated: 4 Aug 2018 4:31 AM GMT)

செல்போன் செயலி, இணையதளம் வழியாக வருவாய்த்துறை சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி,

செல்போன் செயலி மற்றும் இணையதளம் வழியாக வருவாய்த்துறை சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மின்னாளுமை திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் வழியாக பொதுமக்களுக்கு சாதி, வருமான, இருப்பிட, முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் என்பதற்கான சான்றிதழ் ஆகிய 5 சான்றிதழ்கள் முதலில் வழங்கப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து விவசாய வருமான சான்றிதழ், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், விதவைச்சான்றிதழ், வேலையின்மை சான்றிதழ், குடும்ப குடிப்பெயர்வு சான்றிதழ், கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்தமைக்கான சான்றிதழ், ஆண் குழந்தையின்மை சான்றிதழ், திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், செல்வ நிலை சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், வட்டிக்கு பணம் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் உள்ளிட்ட 15 சான்றுகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இ-சேவை மையங்களில் மட்டுமில்லாமல் பொதுமக்கள் தாமாகவே சான்றிதழ்களை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் ‘UM-A-NG’ என்கிற செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து அதன்மூலம் சாதி, இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ் ஆகிய 3 சான்றிதழ்களை பெற பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், அனைத்து 20 வகையான வருவாய்துறை சான்றிதழ்களை www.tnes-ev-ai.tn.gov.in/cit-iz-en என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story