வடகாடு முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்


வடகாடு முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 7 Aug 2018 10:30 PM GMT (Updated: 7 Aug 2018 8:06 PM GMT)

வடகாடு முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து பெரிய கல்மண்டபம், ராஜகோபுரம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்களால் முடி வெடுக்கப்பட்டு திருப்பணிகள் தொடங்கியது. கிராம மக்களின் ஒத்துழைப்பு மற்றும் பலரின் நிதி உதவிகளுடன் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோத்த முத்துப்பட்டியை சேர்ந்த குழுவினரின் கட்டுமானப்பணிகளில் கோவில் கோபுரத்தில் 70 சிலைகள், முன்னால் உள்ள கல் மண்டபத்தில் 17 சிலைகள் மற்றும் 30 தூண்களுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கல் மண்டபத்தில் ராசிகளுக்கான சிற்பங்கள், கல் சங்கிலிகள், மற்றும் கல் சிற்பங்களும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல கோவில் முன்பு புதிதாக அமைக்கப்பட்டுள்ள 55 அடி உயர ராஜகோபுரத்தில் 194 சிமெண்டு சிலைகளும், சுற்றுச்சுவரில் 12 சிற்பங்களும் என ஏராளமான சிலைகள், சிற்பங்களுடன் திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளது.

திருப்பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் வருகிற 23-ந்தேதி (வியாழக் கிழமை) கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்களால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அதற்கான பணிகளில் விழாக்குழுவினர் தீவிரமாக உள்ளனர். கடந்த வாரம் பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கி கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. யாகசாலை அமைக்கும் பணிகளும், அன்னாதானம் வழங்க பந்தல் அமைத்தல் போன்ற பணிகளும் நடந்து வருகிறது. இந்த கும்பாபிஷேகத்தில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Next Story